ADDED : டிச 10, 2025 11:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, ரயில் மோதிய விபத்தில் நேற்று ரயில்வே போலீஸ் உயிரிழந்தார். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் நொய்யல் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம், 42; கரூரில் ரயில்வே போலீசாக பணியாற்றி வந்தார்.
இவர், நேற்று கரூர்-ஈரோடு ரயில்வே பாதை நொய்யல் அருகே, சிறுநீர் கழித்து விட்டு, ரயில்வே பாதையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில், பன்னீர் செல்வம் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன், பன்னீர் செல்வம் உயிரிழந்தார். கரூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

