/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சித்திரை மாத அமாவாசை அம்மன் கோவில்களில் பூஜை
/
சித்திரை மாத அமாவாசை அம்மன் கோவில்களில் பூஜை
ADDED : ஏப் 28, 2025 07:34 AM
கரூர்: சித்திரை மாத அமாவாசையையொட்டி, புன்னம் சத்திரம் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைதொடர்ந்து, சந்தன காப்பு மற்றும் பூக்கள் அலங்காரத்தில், மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், தலையூர் மாரியம்மன் கோவில், புகழூர் மாரியம்மன் கோவில், பொன்னாச்சி அம்மன் கோவில், திருக்காடுதுறை மாரியம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில்களிலும், சித்திரை மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.