/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி மின்துறை அமைச்சர் தொடங்கி வைப்பு
/
கரூரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி மின்துறை அமைச்சர் தொடங்கி வைப்பு
கரூரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி மின்துறை அமைச்சர் தொடங்கி வைப்பு
கரூரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி மின்துறை அமைச்சர் தொடங்கி வைப்பு
ADDED : ஜன 06, 2025 01:48 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கலெக்டர் தங்-கவேல் தலைமை வகித்தார்.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு, தண்ணீர் பந்தல்பாளையத்தில், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறிய சமுதாயக்கூடம்; கிழக்கூரில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்-டப்பட்ட, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பிச்சம்பட்டி பஞ்சாயத்தில், 45.1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராம செயலக கட்டடம்; அரசு காலனி- - பஞ்சமாதேவி- - நெரூர் சாலையை, 49.85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாடு செய்தல் உட்பட, 14 புதிய திட்-டப்பணிகளை, 17.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்-குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கந்தராஜா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ரவிக்-குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.