sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெள்ளம் ஏற்படும்போது முன்னேற்பாடு அவசியம்; கண்காணிப்பு அலுவலர் அறுவுறுத்தல்

/

வெள்ளம் ஏற்படும்போது முன்னேற்பாடு அவசியம்; கண்காணிப்பு அலுவலர் அறுவுறுத்தல்

வெள்ளம் ஏற்படும்போது முன்னேற்பாடு அவசியம்; கண்காணிப்பு அலுவலர் அறுவுறுத்தல்

வெள்ளம் ஏற்படும்போது முன்னேற்பாடு அவசியம்; கண்காணிப்பு அலுவலர் அறுவுறுத்தல்


ADDED : டிச 12, 2024 07:30 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''வெள்ளம் ஏற்படும் போது, முன்னேற்பாடு அவசியம்,'' என, அதிகாரிகளுக்கு கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி திட்-டப்பணிகள் குறித்து, ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. பின், அவர் கூறியதா-வது:வானிலை மையம் சார்பில், கரூர் மாவட்டத்திற்கு இன்று (12ம் தேதி)

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ-மழை தீவிர மடையும் என்பதால், அனைத்து நீர் நிலைகளின் இருப்பு அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில், 2 லட்சம் கன அடி தண்ணீரும்,

அமராவதி ஆற்றில், 1 லட்சம் கன அடி தண்ணீரும் வரும்போது, இரண்டு ஆறுகளும் ஒன்று சேரும் இடத்தில், அருகாமையில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்கான முன்னேற்பாடு

நடவடிக்-கைகளை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில், எவ்வளவு நீர் வெளியேற்றப்-படும் போது, எந்தெந்த பகுதிகள் பாதிப்பு அடைந்தது என்பதை அறிந்து நடவடிக்கை

மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கூறினார். முன்னதாக, கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்-நிலைப் பள்ளியில், 2.45 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்ப-றைகள் கட்டும் பணி, அறிவுசார் மையத்தையும் ஆய்வு

செய்தார்.கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாநகராட்சி கமிஷனர் சுதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us