sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தனியார் கல்லுாரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு

/

தனியார் கல்லுாரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு

தனியார் கல்லுாரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு

தனியார் கல்லுாரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு


ADDED : ஜன 06, 2025 01:57 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,: குளித்தலை அடுத்த கீரனுார் பஞ்., குன்னுடையான் கவுண்டன்-பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கசுந்தரம், 55; போஸ்ட் மாஸ்டர். இவரது மகள் பவதாரணி, 20; திருச்சி தனியார் கல்லுா-ரியில், பி.எஸ்சி., மூன்றாமாண்டு படித்து வந்தார். கடந்த கிறிஸ்-துமஸ் பண்டிகை விடுமுறைக்கு மாணவி பவதாரணி, சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, வீட்டிலிருந்து காணவில்லை.

அக்கம் பக்கம் மற்றும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றின் திட்டில், மாணவி பவதாரணியின் காலணி கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த மாணிக்கசுந்தரம், முசிறி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர். பின் சிறிது நேரத்தில், மாணவி பவதாரணியை சடலமாக மீட்டு மேலே கொண்டுவந்தனர். இதுகுறித்து, தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us