/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 22, 2025 01:15 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்களிடம் இருந்து, 511 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக காதொலி கருவிகள், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு குச்சி மற்றும் பார்வையற்றோர்க்காக கைகடிகாரம் என, 13 பயனாளிகளுக்கு, 46,593 ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல் பரிசாக, 10,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 7,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய் என மொத்தம், 6 பேருக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-
கலெக்டர் சுவாதி ஸ்ரீ, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.