/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு காப்பு
/
கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு காப்பு
ADDED : ஜூன் 17, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, கஞ்சா வைத்திருந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ., செந்தில் குமார் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் திருமாநிலையூர் பஸ் ஸ்டாப் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருமாநிலையூர் காமராஜர் தெருவை சேர்ந்த, பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் வெற்றிச்செல்வன், 21, என்பவர், 60 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.