/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
சாலை பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 19, 2025 01:18 AM
கரூர், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் செவிந்திலிங்கம் தலைமையில், செல்லாண்டிபாளையம் பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி அரசாணை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தகோரி சென்னை சென்ற நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய, காவல் துறையை கண்டிப்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, இணை செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் சிவக்குமார் உள்பட பலர் முகத்தில் முகமூடி அணிந்து பங்கேற்றனர்.