ADDED : ஆக 12, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் ஆணவ படுகொலைக்கு எதிராக, சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ஆணவ கொலையில் ஈடுபடுவோர் மீது கடுமையான, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வி.சி.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.