ADDED : மே 01, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:
கரூர் மத்திய நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், செயலாளர் முரளி தலைமையில், மாநகராட்சி அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், கரூர் மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்த ஊதியம் வழங்க வேண்டும், வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.