ADDED : பிப் 18, 2026 07:38 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரி மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கலையரங்கத்தில் நடந்த விழாவில், விலையில்லா லேப் டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, மாணவ, மாணவியருக்கு லேப் டாப் வழங்கினார்.
இதில், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரி, 985 பேர், அரசு வேளாண் கல்லுாரி, 64 பேர், அரசு மருத்துவக் கல்லுாரி, 188 பேர், சி.எஸ்.ஐ., தொழில் பயிற்சி நிறுவனத்தில், 10 என மொத்தம், 1,325 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 7,814 மாணவ மாணவியருக்கு லேப் டாப் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரி முதல்வர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.
