/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : நவ 25, 2025 01:11 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன், பட்டா மாறுதல், திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 240 மனுக்கள் வரப்பெற்றன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1 நபருக்கு, 63,600 ரூபாய் மதிப்பீட்டிலான செயற்கை கால் கருவி, 1 நபருக்கு, 15,750 மதிப்பீட்டிலான சக்கர நாற்காலி, 1 நபருக்கு, 25,000 ரூபாய் மதிப்பிலான வங்கிக்கடன் மானியம், 3 பேருக்கு திறன் பயிற்சி சான்றிதழ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக, 1 நபருக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பெண் ஓட்டுனர்களுக்கான ஆட்டோ மானிய உதவித்தொகை என மொத்தம், 7 பயனாளிகளுக்கு, 2.04 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

