/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எல்., சார்பில் நிதி உதவி வழங்கல்
/
டி.என்.பி.எல்., சார்பில் நிதி உதவி வழங்கல்
ADDED : பிப் 04, 2025 06:10 AM
கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறு-வன சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபா-ளையம், ந.புகளூர் ஆகிய பஞ்., பகுதிகளின் உட்கட்டமைப்-பினை
மேம்படுத்திடவும், பழங்கால கோவில்களை புனரமைப்ப-தற்கும் நிதியுதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலாயுதம்பாளையம், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி தைப்பூசத் தேர் திருவிழாவுக்கு, 50
ஆயிரம் ரூபாய்க்கான காசோ-லையை, காகித நிறுவனத்தின் பொது மேலாளர் கலைச்செல்வன், ஹிந்துசமய
அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியனிடம் வழங்கினார்.

