sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் கட்சி கூட்டம் நிரந்தர தடைவிதிக்க பொதுமக்கள் கோரிக்கை

/

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் கட்சி கூட்டம் நிரந்தர தடைவிதிக்க பொதுமக்கள் கோரிக்கை

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் கட்சி கூட்டம் நிரந்தர தடைவிதிக்க பொதுமக்கள் கோரிக்கை

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் கட்சி கூட்டம் நிரந்தர தடைவிதிக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : மார் 17, 2025 04:14 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : குளித்தலை பஸ் ஸ்டாண்டில், அரசியல் கட்சி பொதுக்கூட்டம் நடத்த நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை நகராட்சியின், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மிகவும் குறுகிய இடத்தில், அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்-பட்டு வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் திருச்சி, கரூர், கோவை மார்க்கமாக அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, முசிறி, பெரம்பலுார், துறையூர், சேலம் மார்க்கம் பஸ்கள், தரகம்பட்டி, கடவூர் உள்-ளிட்ட பல பகுதிக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன.

குறுகலான இடம்

மேலும், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வாடகை கார், ஆட்டோ நிறுத்தப்பட்டுள்ளன. இதெல்லாம் போதாது என, பற்றாக்கு-றைக்கு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள்

அவ்வப்போது நடந்து வருகின்றன. இதனால் குறுகலான இடத்தில் பஸ் டிரைவர்கள், பொதுமக்கள் வந்து செல்ல கடும் சிர-மத்துக்குள்ளாகின்றனர்.

தடை விதிக்க வேண்டும்

எனவே, மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள், பஸ் டிரைவர்கள் பாதிக்காத வகையில், குளித்தலை பஸ் ஸ்டாண்டில் அரசியல் கட்சி பொதுக்கூட்டம் நடத்த நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us