/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்
/
அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்
ADDED : பிப் 11, 2025 07:23 AM
கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், கலெக்டர் அலுவ-லகம் முன், நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.அதில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும், தி.மு.க., அரசு
அமல்படுத்த வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிக-ளுக்கும், விரிவுப்படுத்த
வேண்டும், அரசு ஊழியர்களுக்கான காப்-பீட்டு திட்டத்தை, தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், அரசு
துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்-ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன. தர்ணா போராட்டத்தில், இந்திய தொழிற்சங்க மைய மாநில துணைத்த-லைவர்
அம்சராஜ், மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், இணைச்செயலாளர் இளங்கோ, பொருளாளர்
பாலசுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

