sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலையின் நடுவே மின் கம்பங்கள் மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

/

சாலையின் நடுவே மின் கம்பங்கள் மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சாலையின் நடுவே மின் கம்பங்கள் மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சாலையின் நடுவே மின் கம்பங்கள் மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஆக 26, 2025 01:03 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே சாலையின் நடுவே மின் கம்பங்கள் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், மின் கம்பங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் அருகே தான்தோன்றிமலை தின்னப்பா நகரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்க பணிகள் நடந்துள்ளது.

அப்போது, சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை, வேறு இடத்துக்கு மாற்றாமல் விட்டு விட்டனர். இந்நிலையில், மின் கம்பம் உள்ள சாலையில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன.

மேலும், இரு சக்கர வாகனங்களில், பொதுமக்கள் சென்று வருவதால், இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். இதனால், தின்னப்பா நகரில் சாலையின் நடுவே உள்ள, மின் கம்பங்களை, சாலை ஓரத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us