/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய உயர்மட்ட பாலத்துக்கு இணைப்பு சாலை: பொதுமக்களிடம் கருத்து கேட்பு
/
புதிய உயர்மட்ட பாலத்துக்கு இணைப்பு சாலை: பொதுமக்களிடம் கருத்து கேட்பு
புதிய உயர்மட்ட பாலத்துக்கு இணைப்பு சாலை: பொதுமக்களிடம் கருத்து கேட்பு
புதிய உயர்மட்ட பாலத்துக்கு இணைப்பு சாலை: பொதுமக்களிடம் கருத்து கேட்பு
ADDED : ஜன 31, 2026 06:14 AM

கரூர்: கரூர் அருகே, உயர்மட்ட பாலத்துக்கு, இணைப்பு சாலை அமைப்பது தொடர்பாக, நெடுஞ்சாலை துறை சார்பில், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
கரூர் மாவட்டம், கோயம்பள்ளி-மேலப்பா-ளையம் இடையே, அமராவதி ஆற்றின் குறுக்கே கடந்த, 2011-16ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. ஆனால், இரண்டு பக்கமும் இணைப்பு சாலை அமைக்கப்ப-டாததால், பாலத்தை பொதுமக்களால் பயன்ப-டுத்த முடியவில்லை.
இதனால், பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். நமது நாளிதழிலும், புதிய பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என செய்தி வெளி-யானது.இந்நிலையில் நேற்று, மேலப்பாளையத்தில் முச்சிலியம்மன் கோவில் திருமண மண்ட-பத்தில், பாலத்துக்கு இணைப்பு சாலை அமைப்-பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், திருச்சி மாவட்ட உதவி ஆட்சியர் (நிலம் எடுப்பு) சர-வணன் தலைமையில் நடந்தது.
அதில், பங்கேற்ற பொதுமக்கள் விரைவாக, பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என, மனு அளித்தனர்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., (நிலம் எடுப்பு) ரம்யா தேவி, ஈரோடு கோட்ட நெடுஞ்சாலை துறை பொறியாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்-றனர்.

