/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
/
குளித்தலையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
ADDED : ஏப் 13, 2025 04:46 AM
குளித்தலை: குளித்தலை தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013ன், கீழ் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இதன்படி, நேற்று நடந்த முகாமிற்கு டி.எஸ்.ஓ., வைரபெ-ருமாள் தலைமை வகித்தார். அவர், பொது மக்களிடமிருந்து ரேஷன் கார்டு தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ., யுவராஜ், அலுவலக உதவி-யாளர் அதியமான் மற்றும் வருவாய் துறையினர் பங்கேற்று, அரசு திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்-தினர்.முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல்போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம் என, பல்-வேறு வகையில் மனுக்கள் பெறப்பட்டன.