sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிரானைட் கல் குவாரி குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

/

கிரானைட் கல் குவாரி குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

கிரானைட் கல் குவாரி குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

கிரானைட் கல் குவாரி குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம்


ADDED : ஆக 29, 2024 07:47 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: வீரியப்பாளையம் கிராமத்தில், கிரானைட் கல் குவாரி குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம் லட்சுமணம்பட்டி தனியார் மண்டபத்தில் நடந்தது.

குளித்தலை ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமை வகித்தார். இதில், வீரியப்பாளையம் கிராமத்தில் உள்ள கிரானைட் கல் குவாரி குறித்து, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசுகையில், ''கல் குவாரி அமைக்கப்பட்டுள்ள இடங்களில், 300 மீட்டர் அளவுக்கு அப்பால் குடியிருப்புகள் இருக்க வேண்டும். ஒலி மாசு ஏற்படுதல், காற்று மாசு ஏற்படுத்தல் ஆகியவை இருக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவு பூமிக்கு கீழ் எடுக்கப்படும் கனிம வளங்கள் அரசுக்கு சொந்தமானது. இதை தனியாரிடம் அனுமதிக்கக் கூடாது. தி.மு.க., அரசு தனது தேர்தல் அறிக்கையில் குவாரிகளை அரசே எடுத்து நடத்தும் என கூறப்பட்டது. இதுவரை அது செயல்படுத்தாமல் உள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் கிடைப்பதில்லை,'' என்றார்.

கரூர் மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய பொறியாளர் ஜெயக்குமார், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், பஞ்சப்பட்டி, சிந்தலவாடி வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், போலீசார், தனியார் குவாரி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us