/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
/
செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
ADDED : ஜூன் 04, 2024 04:24 AM
கரூர்: கரூர் அருகே, செட்டிப்பாளையம் பிரிவில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செட்டிப்பாளையம் பிரிவு உள்ளது. கரூர் நகரப் பகுதியில் இருந்து, கருப்பம்பாளையம் சுக்காலியூர், செட்டிப்பாளையம், அப்பி பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல, மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாக னங்கள் செல்வதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள், கடந்து செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். அடிக்கடி அப்பகுதியில் விபத்துகளும் நடக்கிறது.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது, செட்டிப்பாளையம் பிரிவில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
தற்போது, வாகன பெருக்கம் அதிகரித்து விட்டதால், செட்டிப்பாளையம் உள்ளிட்ட, 20 க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் இருந்து செல்லும் பொதுமக்கள், மதுரை தேசிய நெடுஞ்சாலையை எளிதாக, கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், விபத்துகளை தடுக்க செட்டிப்பாளையம் பிரிவில், ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.