/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனத்தின் விவசாயிகளின் தொடர்பு செயலி அறிமுகம்
/
புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனத்தின் விவசாயிகளின் தொடர்பு செயலி அறிமுகம்
புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனத்தின் விவசாயிகளின் தொடர்பு செயலி அறிமுகம்
புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனத்தின் விவசாயிகளின் தொடர்பு செயலி அறிமுகம்
ADDED : மார் 17, 2025 04:41 AM
கரூர்: புகழூர், டி.என்.பி.எல்., நிறுவனத்தின், 'விவசாயிகளின் தொடர்பு' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தினர், கூழ் மரத்தோட்ட சாகுபடியை பண்ணைக்காடுகள் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வரு-கின்றனர். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்
விவசாயிகளுக்கு, தரமான குளோனல் தைலம் மற்றும் சவுக்கு மரக்கன்றுகளை நிறுவனமே உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
மேலும், நிறுவன களப்பணியாளர்கள் நடவு முதல் அறுவடை வரை, அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகின்-றனர். கூழ் மர சாகுபடி பற்றிய, தொழில் நுட்பங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், 'விவசாயிகளின் தொடர்பு' என்ற மொபைல் செயலியை டி.என்.பி.எல்., நிறுவனம் அறிமுகப்படுத்-தியுள்ளது. புதிய செயலியை, ஆலையின் மேலாண்மை இயக்-குனர் சந்தீப் சக்சேனா அறிமுகம் செய்து வைத்தார்.