/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா நாளை மறுநாள் தொடக்கம்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா நாளை மறுநாள் தொடக்கம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா நாளை மறுநாள் தொடக்கம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா நாளை மறுநாள் தொடக்கம்
ADDED : அக் 02, 2024 02:04 AM
வெங்கடரமண சுவாமி கோவிலில்
புரட்டாசி விழா நாளை மறுநாள் தொடக்கம்
கரூர், அக். 2-
தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழா நாளை மறுநாள் (அக்., 4 ல்) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கரூர் அருகே தான்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு நாளை மறுநாள் காலை, கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாக னங்களில், உற்சவர் திருவீதி உலாவும், வரும் அக்., 10 ல் மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 12 காலை, 9:15 மணிக்கு தேரோட்டம், வரும், 21 ல் முத்து பல்லக்கு, 22ல் ஆளும் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. புரட்டாசி திருவிழாவையொட்டி, கோவிலில் பக்தர்கள் வரிசையாக நின்று செல்ல, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி, 30 க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் நிறுவப்பட்டுள்ளது.