/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் வைகாசி விழாவில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம்
/
மாரியம்மன் கோவில் வைகாசி விழாவில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம்
மாரியம்மன் கோவில் வைகாசி விழாவில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம்
மாரியம்மன் கோவில் வைகாசி விழாவில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம்
ADDED : ஜூன் 08, 2024 02:27 AM
கரூர்: மாரியம்மன் கோவில், வைகாசி பெரு விழாவையொட்டி, புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நேற்று இரவு நடந்தது.
கரூரில் மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம், 12 முதல் வைகாசி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. பூச்சொரிதல், காப்பு கட்டுதல், மகா சண்டியாகம், தேரோட்டம், மாவிளக்கு ஊர்வலம், கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. தற்போது, நாள்தோறும் பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்து வருகிறது.
நேற்று இரவு, புஷ்ப பல்லக்கில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இன்று இரவு, 7:00 மணிக்கு வெள்ளி ஊஞ்சல் உற்சவம், நாளை அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது.