நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வினாடி-வினா போட்டி நடந்தது. அதில், தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் முறை, பேரிடர் காலத்தை சமாளிப்பது குறித்து, தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் விளக்கம் அளித்தார்.
மாணவர்களுக்கு தீ தடுப்பு முறைகள் குறித்து வினாடி-வினா போட்டி நடத்தி, பரிசு வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் விஜயன், உதவி தலைமையாசிரியர்கள் பொன்னுசாமி, யுவராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.

