sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஒளிரும் விளக்குகள் இல்லாத ரயில்வே பாலம்: பொதுமக்கள் கடும் அவதி

/

ஒளிரும் விளக்குகள் இல்லாத ரயில்வே பாலம்: பொதுமக்கள் கடும் அவதி

ஒளிரும் விளக்குகள் இல்லாத ரயில்வே பாலம்: பொதுமக்கள் கடும் அவதி

ஒளிரும் விளக்குகள் இல்லாத ரயில்வே பாலம்: பொதுமக்கள் கடும் அவதி


ADDED : ஏப் 27, 2024 09:40 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 09:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே ரயில்வே மேம்பாலத்தின் துாண்களில், ஒளிரும் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

கரூர் - திண்டுக்கல் ரயில்வே பாதை, பசுபதிபாளையம் தொழிற்பேட்டை சாலையின் குறுக்கே மேல் பகுதியில் செல்கிறது. இதற்காக, கீழ்பகுதியில் வாகனங்கள் செல்ல வசதியாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதில், ஐந்துக்கும் மேற்பட்ட துாண்கள் உள்ளது. இந்நிலையில், கரூர்-திண்டுக்கல் ரயில்வே வழித்தடம் மின் மயமாக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் செல்லாத வகையில், இரும்பு ராட்சத துாண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கரூரில் இருந்து தொழிற்பேட்டை, மேலப்பாளையம், சணப்பிரட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு, அந்த சாலை வழியாக வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால், பழைய சிமென்ட் துாண்கள், புதிய இரும்பு துாண்களில், இரவு நேரத்தில் ஒளிரக் கூடிய விளக்குகள் இல்லை. மஞ்சள் நிறத்தில் வைக்கப்பட்டுள்ள, எச்சரிக்கை போர்டுகளும் உடைந்த நிலையில் உள்ளது.

இதனால், இரவு நேரத்தில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், ரயில்வே பாலத்தின் கீழ் துாண்கள் இருப்பது தெரியாமல், அதன் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, தொழிற்பேட்டை சாலையில் உள்ள, ரயில்வே மேம்பாலத்தின் துாண்களில், இரவு நேரத்தில் ஒளிரக்கூடிய விளக்குகளை அதிகளவில், பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us