sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை வாழை மரங்கள் சாய்ந்ததால் நாசம்

/

கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை வாழை மரங்கள் சாய்ந்ததால் நாசம்

கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை வாழை மரங்கள் சாய்ந்ததால் நாசம்

கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை வாழை மரங்கள் சாய்ந்ததால் நாசம்


ADDED : மே 08, 2025 01:23 AM

Google News

ADDED : மே 08, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் பெய்த மழை காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள வாழை மரங்கள் சேதமடைந்தன.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர், மணவாசி, மாயனுார் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியது. இதில், மகிளிப்பட்டி அடுத்த உடையந்தோட்டத்தை சேர்ந்த விவசாயி செந்தில் என்பவரின், 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

பொய்கைப்புத்துாரை சேர்ந்த கோபால் என்ற விவசாயிக்குரிய, ஒரு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட, 500 வாழை மரங்கள் காற்றில் அடியோடு சாய்ந்தது. இதில் இரு விவசாயிகளுக்கு, ரூ.1.25 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு அடைந்த பகுதிகளுக்கு, கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலைத்துறை நிர்வாகம் நேரில் கள ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us