/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழையால் மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
மழையால் மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஏப் 14, 2025 07:07 AM
கரூர்: கோடை மழையால், மாய னுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து, நேற்று அதிகரித்தது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் மட்டும் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் காவிரியாற்று பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால், மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 219 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மழை காரணமாக தண்ணீர் வரத்து வினாடிக்கு, 1,503 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் குடிநீர் தேவைக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 8 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி அணையில் இருந்து, ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 48.59 அடியாக இருந்தது. ஆத்துப்பாளையம் அணை கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 9.18 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.