ADDED : நவ 24, 2025 01:18 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்., மாதம் மூன்றா-வது வாரத்தில் தொடங்கியது. இதனால், மாநிலம் முழுவதும் பர-வலாக மழை பெய்து வருகிறது.
தற்போது, தென் கிழக்கு வங்க கடல் பகுதியில், தென் தமிழகத்தின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் பர-வலாக மழை பெய்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் கடந்த, ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை , 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம்: கரூர், 4.40 மி.மீ., அரவக்குறிச்சி, 32, அணைப்பாளையம், 13.40, குளித்தலை, 2, கிருஷ்ணராயபுரம், 14, மாயனுார், 21, பஞ்சப்பட்டி, 10.40, கடவூர், 6, பாலவிடுதி, 4.50, மயிலம்பட்டி, 6 மி.மீ., அளவு மழை பதிவானது.
நேற்று மதியம், 12.30 மணி முதல் கரூர் டவுன், திருமாநி-லையூர், மண் மங்கலம், வெங்கமேடு, பசுபதிபாளையம், தொழிற்பேட்டை, காந்தி கிராமம், சுங்க கேட், தான்தோன்றிலை, செல்லாண்டிப் பாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட, பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்தது. இடையே வெயிலும் அடித்-ததால், மாறுபட்ட சீதோஷ்ண நிலையில், பொதுமக்கள் அவதிப்-பட்டனர்.

