ADDED : அக் 09, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சியில்
கொட்டிய மழை
அரவக்குறிச்சி, அக். 9-
அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாலை, 4:00 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 1 மணி நேரம் பலத்த மழையாக இடைவிடாமல் பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.