/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் மழை
/
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் மழை
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் மழை
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் மழை
ADDED : ஆக 10, 2025 01:05 AM
கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில், மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு, சுழற்சி காரணமாக தமிழகத்தில், பல மாவட்டங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம், நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கரூரில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. திடீரென நேற்று மாலை, 4:00 முதல், 4:30 மணி வரை கரூர் நகர், திருகாம்புலியூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், கொளந்தானுார், புலியூர், வெண்ணைமலை, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், காற்றுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்தது. இதனால், கரூர் வட்டார பகுதிகளில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
* கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் குளித்தலையில், 2.40 மி.மீ., பாலவிடுதி, 3 மி.மீ., மயிலம்பட்டி, 4 மி.மீ., மழை பதிவானது.