sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் சுற்று வட்டார பகுதியில் காற்றுடன் மழை

/

கரூர் சுற்று வட்டார பகுதியில் காற்றுடன் மழை

கரூர் சுற்று வட்டார பகுதியில் காற்றுடன் மழை

கரூர் சுற்று வட்டார பகுதியில் காற்றுடன் மழை


ADDED : செப் 10, 2025 02:04 AM

Google News

ADDED : செப் 10, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு, சுழற்சி காரணமாக தமிழகத்தில், பல மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

ஆனால், கரூர் மாவட்டத்தில் மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. மேலும், வெயிலின் தாக்கம் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு, 8:30 மணி முதல், 9:00 மணி வரை கரூர் நகர், திருக்காம்புலியூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், கொளந்தானுார், புலியூர், வெண்ணைமலை, தொழிற்பேட்டை பகுதிகளில், காற்றுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்தது.

இதனால், திருச்சி சாலை தெரசா கார்னர், சுங்ககேட், பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, பழைய திண்டுக்கல் சாலை, பழைய அரசு மருத்துவமனை சாலை, கோவை சாலைகளில் மழைநீர் ஓடியது. நேற்று இரவு பெய்த மழையுடன், குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us