ADDED : நவ 25, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் வாழை சாகுபடியில் விவசா-யிகள் ஈடுபட்டுள்ளனர். இதில், ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ரக வாழைகள் சாகுபடி செய்யப்படுகிறது.
விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்-பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு-வந்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார், 250 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.