/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.450க்கு விற்பனை
/
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.450க்கு விற்பனை
ADDED : ஏப் 28, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில், வாழை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இங்கு, பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி ரக வாழைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வாய்க்கால் பாசனம் மூலம் வாழைக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. நேற்று, நடந்த ஏலத்தில், பூவன் வாழைத்தார், 400, ரஸ்தாளி, 450, கற்பூரவள்ளி, 250 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

