/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் வரும் 9ல் ரேஷன் குறைதீர் கூட்டம்
/
மாவட்டத்தில் வரும் 9ல் ரேஷன் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 07, 2025 01:18 AM
கரூர், கரூர் மாவட்டத்தில் வரும், 9ம் தேதி ரேஷன் குறைதீர் கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில் வரும், 9 காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது. கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்-கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.