ADDED : மார் 11, 2024 11:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறையின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டம் சார்பில், ரேஷன் குறைதீர் முகாம் நடந்தது.
டி.எஸ்.ஓ., சுதா தலைமை வகித்து, மக்களிடமிருந்து குடும்ப அட்டை சம்பந்தமான கோரிக்கை மனுக்களை பெற்றார். வி.ஏ.ஓ., முத்துக்குமார், உதவியாளர் அதியமான், வருவாய் துறையினர் கலந்துகொண்டு அரசு திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை என பல்வேறு வகையில் மனுக்கள் பெறப்பட்டன.

