/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரேஷன் ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு
/
ரேஷன் ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு
ADDED : மார் 05, 2026 07:17 AM
நாமகிரிப்பேட்டை:கூட்டுறவு
ரேஷன் கடை பணியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட
செயலாளர் நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில்,
நாகராஜ் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளில்
பணி-யாற்றும் ஊழியர்களுக்கு நீண்ட காலமாக ஊதிய உயர்வு
வழங்-கப்படாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு
தொழிற்சங்கங்கள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை
வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் இதற்காக பல கட்ட போராட்டங்களை
ஊழியர்கள் நடத்தினர். தங்களுக்கு நியாய-மான ஊதிய உயர்வு வழங்க
வேண்டும் என, ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால்,
இதுவரை அதற்-கான அரசாணை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில்,
தமிழ்நாடு கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்-களின் அனைத்து தொழிற்சங்க
கூட்டமைப்பு சார்பில் சென்-னையில், 6ம் தேதி கூட்டுறவு சங்கங்களின்
பதிவாளர் அலுவ-லகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த
திட்டமிட்டுள்ளோம் இதில், ரேஷன் கடை பணியாளர்கள் அனைவரும் திரளாக
கலந்துகொள்ள வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.

