/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் காவிரி கரையோர பட்டா நிலங்களில் நுாதன மணல் கொள்ளை
/
கரூர் காவிரி கரையோர பட்டா நிலங்களில் நுாதன மணல் கொள்ளை
கரூர் காவிரி கரையோர பட்டா நிலங்களில் நுாதன மணல் கொள்ளை
கரூர் காவிரி கரையோர பட்டா நிலங்களில் நுாதன மணல் கொள்ளை
ADDED : ஜூலை 16, 2025 01:09 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், காவிரியாற்றின் கரையோர பகுதிகளில், பட்டா நிலங்களில் நுாதன முறையில் மணல் கொள்ளை நடக்கிறது.
கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பகுதிகளில் கடந்த, 2011-16ல், அ.தி.மு.க., ஆட்சியில், 10க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. பிறகு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட குவாரிகளில் மட்டும், மணல் விற்பனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேலான, மணல் குவாரிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி கடந்த, 2019ல் மூடப்பட்டது. மணல் தேவைக்காக, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் திறக்கப்பட்ட, மணல் குவாரிகளும் படிப்படியாக மூடப்பட்டன.
கடந்த, 2021ல், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கரூர் மாவட்டத்தில் காவிரியாற்று பகுதியில் நன்னியூர் புதுார், மலையம்பாளையம் பகுதியில், இரண்டு மணல் குவாரிகள் திறக்கப்பட்டன. ஆனால், அமலாக்கத்துறை நடவடிக்கை காரணமாக, இரண்டு மணல் குவாரிகளும் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
ஆனால், கரூர் மாவட்ட காவிரியாறு, அமராவதி ஆற்றுப்பகுதிகளில், தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருகிறது. லாரிகள், மாட்டு வண்டிகள், இருசக்கர வாகனங்கள் மூலம் இரவு, 11:00 மணி முதல், அதிகாலை, 5:00 மணி வரை நீதிமன்ற தடையை மீறி, சர்வ சாதாரணமாக ஆற்றுப்
பகுதிகளில் இருந்து மணல் அள்ளி செல்லப்படுகிறது. ஆனால், பெயரளவுக்கு மணல் கொள்ளையர்கள் மீது, காவிரியாற்று பகுதிகளான வேலாயுதம்பாளையம், வாங்கல், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை போலீஸ் ஸ்டேஷன்களிலும், அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்
குறிச்சி, சின்ன தாராபுரம், க.பரமத்தி, தான்தோன்றிமலை ஆகிய போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளிலும், ஒரு சில வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
மணல் கொள்ளையர்களுக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளின் பின்புலம் உள்ளதால், பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவது இல்லை. இந்நிலையில், திருட்டுத்தனமாக மணல் அள்ளும் வகையில், ஆற்றுப்பகுதியின் கரையோரத்தில் உள்ள பட்டா நிலங்கள் மீது, மணல் கொள்ளையர்களின் பார்வை விழுந்துள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், மணல் குவாரிகள் செயல்படாததால், காவிரியாற்று பகுதிகளில் அதிகளவில் மணல் தேங்கியுள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக குறுவை, தாளடி, சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து, காவியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், காவிரியாற்றின் கரையோர பகுதிகளில் உள்ள, பட்டா நிலங்களில் மணல் அதிகளவில் தேங்கியுள்ளது. அந்த நிலத்தை ஒப்பந்த அடிப்படையில், ஒரு தொகை நிர்ணயம் செய்து மணல் அள்ளப்படுகிறது. பட்டா நிலத்தில் மணல் அள்ளுவது போல, காவிரியாற்று பகுதிகளிலும் மணல் கொள்ளை போகிறது. அதை அரசு துறை அதிகாரிகள், போலீசார் கண்டுகொள்வதில்லை. மேலும், காவிரியாற்றின் கரையோர பகுதிகளில், அடிக்கடி சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.