/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வடிகாலில் நாணல் செடிகள் தண்ணீர் செல்வதில் பாதிப்பு
/
வடிகாலில் நாணல் செடிகள் தண்ணீர் செல்வதில் பாதிப்பு
வடிகாலில் நாணல் செடிகள் தண்ணீர் செல்வதில் பாதிப்பு
வடிகாலில் நாணல் செடிகள் தண்ணீர் செல்வதில் பாதிப்பு
ADDED : ஜன 01, 2025 01:26 AM
வடிகாலில் நாணல் செடிகள்
தண்ணீர் செல்வதில் பாதிப்பு
கிருஷ்ணராயபுரம், ஜன. 1-
வீரகுமாரன்பட்டி அருகில், புங்காற்று நெடுகை வடிகாலில் அதிகமான நாணல் செடிகள் வளர்ந்து வருவதால், தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரகுமாரன்பட்டி பகுதியில் புங்காற்று நெடுகை செல்கிறது. இந்த நெடுகை அருகில், மங்கம்மாள் சாலை வழியாக உள்ள விளை நிலங்களில் இருந்து வடிந்து வரும் நீர், வடிகால் கால்வாயுடன் இணைகிறது. மேலும் மழை நீர் வடிந்து செல்லும் வகையில், வீரகுமாரன்பட்டி பகுதியில் இருந்து கோட்டமேடு வரை செல்கிறது. தற்போது புங்காற்று நெடுகை அருகில், அதிகமான நாணல் செடிகள் வளர்ந்து வருவதால் வடிகாலில் வடிந்து வரும் நீர், புங்காற்று நெடுகையில் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, வடிகாலில் வடிநீர் விரைந்து வடிந்து செல்லும் வகையில், புங்காற்று நெடுகை வழித்தடங்களில் உள்ள நாணல் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.