/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென்னையில் கூடு கட்டிய தேனீக்கள் அகற்றம்
/
தென்னையில் கூடு கட்டிய தேனீக்கள் அகற்றம்
ADDED : ஜன 22, 2026 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம், 50, விவசாயி. இவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் தேன் கூடு கட்டி இருந்தது. அவ்வப்போது அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தது. இந்த தேன் கூட்டை கலைத்து அப்புறப்ப-டுத்த வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்-டது.
தொடர்ந்து, புகழூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், தண்ணீரை பம்ப் மூலம் வேகமாக பாய்ச்சி, தேனீக்களை அழித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

