/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துவக்கப்பள்ளியில் ரூ.5.84 லட்சம் புனரமைத்தல் பணி
/
துவக்கப்பள்ளியில் ரூ.5.84 லட்சம் புனரமைத்தல் பணி
ADDED : ஏப் 07, 2025 04:25 AM
கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் அருகில் அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறு-வன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடம் மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
காகித நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்-செல்வன் தலைமை வகித்தார். இப்பள்ளியில், 5.84 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி கட்டடம், மேற்கூரை புனரமைத்தல், புதிய தரைதளம் அமைத்து வர்ணம் பூசுதல், கதவு மற்றும் ஜன்-னல்கள் புதுப்பித்தல் ஆகிய பணிகள் செய்து முடிக்கப்பட்டது.புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் ரூபா, பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆலை முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., துணைத் தலைவர் சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.