sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோடை மழை துவங்கும் முன் சாக்கடை கால்வாயை தூர்வார கோரிக்கை

/

கோடை மழை துவங்கும் முன் சாக்கடை கால்வாயை தூர்வார கோரிக்கை

கோடை மழை துவங்கும் முன் சாக்கடை கால்வாயை தூர்வார கோரிக்கை

கோடை மழை துவங்கும் முன் சாக்கடை கால்வாயை தூர்வார கோரிக்கை


ADDED : மார் 16, 2024 01:53 AM

Google News

ADDED : மார் 16, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் நகரில், கோடை மழை பெய்ய துவங்கும் முன், சாக்கடை கால்வாய்களை துார்வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், வடகிழக்கு பருவமழை பெய்த போது, கரூர் நகர பகுதிகளான கோவை சாலை, ஜவஹர் பஜார், தின்னப்பா கார்னரில் சாக்கடை கழிவு கலந்த தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் சாலைகளில், கார், இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கரூர் நகரில் கடந்த, 10 நாட்களாக கோடைக்காலத்தையொட்டி, வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் கோடைமழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கரூர் நகரில் கோடை மழை பெய்யும் போது, மழை நீர் சாலைகளில் தேங்கும் அபாயம் உள்ளது. கரூர் நகரில் உள்ள சாக்கடை கால்வாயை துார்வார வேண்டும். இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து, பல மாதங்கள் ஆகிறது. மண், பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லை. கரூர் மாவட்டத்தில், கோடை மழை பெய்யும் முன், கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை துார் வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us