sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருச்சி ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை அமைக்க வேண்டுகோள்

/

திருச்சி ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை அமைக்க வேண்டுகோள்

திருச்சி ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை அமைக்க வேண்டுகோள்

திருச்சி ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை அமைக்க வேண்டுகோள்


ADDED : டிச 08, 2024 01:56 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 8-

கரூர் அருகே, திருச்சி ரயில்வே வழித்தடத்தில் பெரிய அளவிலான, குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என, கிராம பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட்டது. ஒருபுறம் காவிரியாறு, மறுபுறம் கிளை வாய்க்கால்கள் மற்றும் சாலைகள் இடையே, கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடம் செல்கிறது. இதனால், இரட்டை ரயில்வே வழித்தடம் அமைக்க முடியாத நிலையில் கடந்த, 2019 ல் தான் கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடம் மின் மயமாக்கப்பட்டது.

இதனால், அந்த ரயில்வே வழித்தடத்தில் பசுபதிபாளையம், சணப்பிரட்டி, லாலா பேட்டை உள்ளிட்ட பல இடங்களில், கேட்டை நிரந்தரமாக மூடும் வகையில் புதிதாக குகை வழிப்பாதைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிகளவில் வாகனங்கள் செல்லும் கட்டளை சாலை ரயில்வே கேட் பகுதியில், சிறிய அளவிலான குகை வழிப்பாதையில், டூவீலர்கள் மட்டும் செல்ல முடியும். அந்த பாதையும் முட்புதராக உள்ளது. அதில், கனரக வாகனங்கள் செல்ல முடியாது. இதனால், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கட்டளை, ரங்கநாதபுரம், கீழ்மாயனுார், மாயனுார் பகுதிகளுக்கு, வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், அடிக்கடி ரயில்கள் செல்லும் போது காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக, கட்டளை பகுதியில் இருந்து மாயனுார் கதவணை சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம் மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு, பொதுமக்கள் எளிதாக சென்று விட முடியும். ஆனால், கட்டளை சாலையில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

எனவே, கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடம் கட்டளை சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில், பெரிய அளவிலான குகை வழிப்பாதையை அமைக்க, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us