sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டுகோள்

/

அரவக்குறிச்சியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டுகோள்

அரவக்குறிச்சியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டுகோள்

அரவக்குறிச்சியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டுகோள்


ADDED : ஆக 24, 2025 01:11 AM

Google News

ADDED : ஆக 24, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரவக்குறிச்சி ஒன்றியத்தில், 18 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சி ஆகியவை முக்கிய பகுதிகளாக உள்ளன. தாலுகா தலைமையிடமான அரவக்குறிச்சி, 40 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டுள்ளது. ஆனால், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இங்கு இல்லை.

பெண்கள் புகார் கொடுக்க அரவக்குறிச்சியில் இருந்து, 30 கி.மீ., துாரமுள்ள கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அல்லது 35 கி.மீ., துாரமுள்ள க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் கணவர், மாமியார் கொடுமை, வீடு மற்றும் பொது இடங்களில் பாலியல் தொந்தரவு என, பல்வேறு வகையில் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்னைக்கெல்லாம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சென்றுதான் புகார் கூறும் நிலை உள்ளது.

அரவக்குறிச்சியில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க உயர் அதிகாரியிடம், இப்பகுதி மக்கள் சார்பில், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பெண்கள் பிரச்னைக்கு தீர்வுகாண, அரவக்குறிச்சியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us