/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பிடத்தை திறக்க கோரிக்கை
/
மாயனுார் ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பிடத்தை திறக்க கோரிக்கை
மாயனுார் ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பிடத்தை திறக்க கோரிக்கை
மாயனுார் ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பிடத்தை திறக்க கோரிக்கை
ADDED : அக் 14, 2024 05:27 AM
கரூர்: மாயனுார் வழியாக நாள் தோறும், 25க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. மாயனுாரில் இருந்து நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நாள்தோறும் தொழிலாளர்கள், மாணவ, மாணவியர், ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாயனுார் ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பாரங்-களில் உள்ள, கழிப்பிடங்கள் பெரும் பாலும் பூட்டப்பட்டுள்ளன. இதனால், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், கழிப்பிடம் கட்ட வேண்டும் என, பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இதைய-டுத்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில், நவீன வசதிகளுடன் சில மாதங்களுக்கு முன் கழிப்பிடம் கட்டும் பணி துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது. புதிய கழிப்பிடத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு, திறந்து விடாமல் பூட்டி வைக்கப்பட்-டுள்ளது.இதனால், மாயனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள், தொடர்ந்து திறந்த வெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள, கழிப்பி-டங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.