ADDED : ஜன 16, 2026 04:45 AM
கரூர்: க.பரமத்தி கடை வீதியில், தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர்--கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி கடைவீதி அமைந்துள்ளது. இங்கு போலீஸ் ஸ்டேஷன், வாரச்சந்தை, அஞ்ச-லகம், பஞ்., அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், ஆர்.ஐ., அலு-வலகம், மளிகை கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.
இதனால், 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களிலிருந்து பள்ளி, கல்-லுாரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள், உள்ளூர், வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் பல்வேறு பணி நிமித்தமாக, க.பரமத்தி நான்கு வழி சந்திப்புக்கு வருகின்றனர்.மேலும் ஆரியூர் மற்றும் சின்னதாராபுரம் பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகளும், நொய்யல் வழியிலிருந்து க.பரமத்திக்கு வரும் வாகன ஓட்டிகளும், கரூர்-கோவை தேசிய நெடுஞ்சா-லையில் ஏராளமான ஜல்லி மற்றும் மணல் லாரிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று திரும்புகின்றன. இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த, க.பரமத்தி கடைவீதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.

