/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவுநீர் வாய்க்காலில் தேங்கிய குப்பை கொசு உற்பத்தியால் நோய் பரவும் அபாயம்
/
கழிவுநீர் வாய்க்காலில் தேங்கிய குப்பை கொசு உற்பத்தியால் நோய் பரவும் அபாயம்
கழிவுநீர் வாய்க்காலில் தேங்கிய குப்பை கொசு உற்பத்தியால் நோய் பரவும் அபாயம்
கழிவுநீர் வாய்க்காலில் தேங்கிய குப்பை கொசு உற்பத்தியால் நோய் பரவும் அபாயம்
ADDED : ஏப் 27, 2025 04:20 AM
கரூர்: கரூர் ரத்தினம் சாலை யில் ரயில்வே ஸ்டேஷன், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, சினிமா தியேட்டர்கள், வாழைக்காய் மண்டி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம், டீ கடை, ஓட்டல்களும், ஏராள-மான வீடுகளும் உள்ளன.
இந்நிலையில், ரத்தினம் சாலையில் உள்ள சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில், குப்பை தேங்கி, செடிகள் முளைத்துள்ளன.  கழி-வுநீர்  செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. அதில், கொசு உற்பத்-தியும் அதிகரித்துள்ளது.அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள், இரவு நேரத்தில் துாங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் நோய் பரவும் அபா-யமும் ஏற்பட்டுள்ளது. மேலும், கரூர் நகரில் கோடை மழை பெய்யும் போது, கழிவுநீர் வாய்க்காலில் குப்பை தேங்கியி-ருந்தால், மழை நீர் சாலையில் ஓடும் அபாயம் உள்ளது. எனவே, ரத்தினம் சாலையில் உள்ள, கழிவுநீர் வாய்க்காலில் உள்ள, குப்-பையை அகற்ற கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

