ADDED : நவ 25, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், எல்.என்.எஸ்., சமுத்திரம் வி.ஏ.ஓ., குப்புசாமி, 43; இவர், நேற்று முன்தினம் மதியம், கரூர் ஆதிகிருஷ்ணபுரம் பகு-தியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, 'அசோக் லேலேண்ட்' லாரியில், நான்கு யூனிட் ஆற்று மணலை திருடியதாக, ஈரோடு பவானியை சேர்ந்த சுதாகர், 35, என்பவர் மீது போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார், சுதாகரை கைது செய்து, லாரியுடன், மணலை பறிமுதல் செய்தனர்.