sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

/

கரூரில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

கரூரில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

கரூரில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்


ADDED : மே 10, 2024 07:26 AM

Google News

ADDED : மே 10, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கரூரில் இருந்து, தான்தோன்றிமலை சுங்ககேட் சாலை வழியாக அரசு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம், திருச்சி பைபாஸ் சாலை, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பிற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. இதில், மில்கேட் பகுதியில் இருந்து பழைய எஸ்.பி., அலுவலகம் வரை, சாலையின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. இங்கு, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

வர்த்தக நிறுவனங்கள், வங்கிகளுக்கு தினமும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இவர்கள், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, நீண்ட நேரம் கழித்துதான் வாகனங்களை எடுத்துச் செல்கின்றனர். சாலையின் இரு பகுதிகளில், எல்லையை குறிக்கும் வகையில் வெள்ளை கோடு வரையப்பட்டுள்ளது. அந்த கோட்டையும் ஆக்கிரமித்து, வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்படுகிறது. சாலையில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டால் மட்டுமே, போக்குவரத்தை முறைப்படுத்த முடியும்.






      Dinamalar
      Follow us