ADDED : மே 29, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில், கடந்த ஒரு வாரமாக அதிக காற்று வீசி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், ஓரத்தில் உள்ள முட்செடிகள் அருகில் செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் செல்கின்றனர்.
இந்நிலையில், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோரத்தில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி, முட்செடிகள் அகற்றும் பணியை நேரில் ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வினோத்குமார் உடனிருந்தார்.