/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'அய்யர்மலையில் ரோப்கார் சேவை வரும் 28, 29ல் நிறுத்தப்படுகிறது'
/
'அய்யர்மலையில் ரோப்கார் சேவை வரும் 28, 29ல் நிறுத்தப்படுகிறது'
'அய்யர்மலையில் ரோப்கார் சேவை வரும் 28, 29ல் நிறுத்தப்படுகிறது'
'அய்யர்மலையில் ரோப்கார் சேவை வரும் 28, 29ல் நிறுத்தப்படுகிறது'
ADDED : டிச 26, 2024 03:06 AM
குளித்தலை: அய்யர்மலையில் உள்ள ரோப்கார் சேவை வரும், 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தப்படுகிறது.
குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்-ளது. ஹிந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலைக்கோவில் செங்குத்தாக, 1,017 படிகளை கொண்டது. பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பாதிக்-கப்பட்டு வந்தனர். கோவில் குடிப்பாட்டுக்கார்கள், பக்தர்கள் கோரிக்கையை ஏற்று பொது மக்கள் பங்களிப்பு தொகையுடன், ரோப்கார் சேவை வசதியை மூன்று மாதங்களுக்கு மேலாக பக்-தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் தங்க ராஜீ கூறுகையில்,'' அய்யர்மலை ரத்தினகிரீஸ்-வரர் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை வரும், 28 29 ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தப்படுகி-றது,'' என்றார்.